ராஜமவுலி படம் : காத்திருக்கும் கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷின் சினிமா வாழ்க்கையில் நடிகை சாவித்ரியின் வேடத்தில் அவர் நடித்த மகாநடி முக்கியமான படமாகும். அந்தப்படத்திற்கு பிறகு தமிழில் சாமி-2, சண்டக்கோழி-2, சர்கார் என மூன்ற படங்கள் வெளியாகிவிட்ட நிலையில், தெலுங்கில் இன்னும் ஒரு படம் கூட வெளியாகவில்லை.
என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படத்தில் மீண்டும் சாவித்ரியாக நடிக்க வந்த வேடத்தை கூட தவிர்த்து விட்டார். இந்நிலையில், சமீபத்தில் பூஜை போடப்பட்ட ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்தில், கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். நவம்பர் 29-ந்தேதி அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பின் போது கீர்த்தி சுரேஷ் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த படத்திற்காக தன்னைத்தேடி சில புதிய பட வாய்ப்புகள் வந்தபோதும் ஏற்காமல் காலம் கடத்தி வருகிறாராம்.