இத்தாலியில் கணவன் - மனைவியான ரன்வீர் - தீபிகா

தினமலர்  தினமலர்
இத்தாலியில் கணவன்  மனைவியான ரன்வீர்  தீபிகா

காதல் ஜோடிகளாக வலம் வந்த ஹிந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே இருவரும் இல்வாழ்க்கையில் இணைந்தனர். இவர்களது திருமணம் இத்தாலியில் உள்ள லேக் கோமோ என்ற இடத்தில் சிறப்பாக நடந்தது.

இத்தாலி நேரப்படி இன்று(நவ., 14) காலை 7 மணிக்கு, கொங்கணி மற்றும் பஞ்சாப் முறைப்படி இவர்களது திருமணம் நடந்தது. முன்னதாக நேற்று சங்கீத் நிகழ்வு நடைபெற்றது. ஆட்டம், பாட்டு, கொண்டாட்டம் என திருமணம் அமர்க்களமாய் நடந்தது. இந்தத் திருமண நிகழ்வில் இருவரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் கலந்து கொண்டனர்.

தீபிகா சார்பில் பெங்களூருவில் நவம்பர் 21ம் தேதி ஒரு வரவேற்பும், அதன்பின் ரன்வீர், தீபிகா இருவரும் இணைந்து திரையுலகப் பிரமுகர்களுக்காக டிசம்பர் 1ம் தேதியும் வரவேற்பை நடத்த உள்ளனர்.

மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ராய், வித்யா பாலன், அனுஷ்கா சர்மா ஆகியோரது வரிசையில் தீபிகாவும் இணைந்துள்ளார்.

மூலக்கதை