கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன்னால் பரபரப்பு! பொலிஸார் தீவிர பாதுகாப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன்னால் பரபரப்பு! பொலிஸார் தீவிர பாதுகாப்பு

 கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன்பாக இன்று குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

 
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய இன்றைய தினம் பலர் உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
 
இந்த நிலையில் அங்கு வந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடகங்களுக்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இதன் பின்னர் அவர் அங்கிருந்து செல்ல முயற்சித்த போது கூட்டத்திலிருந்த அடையாளம் தெரியாத நபரொருவர் கூச்சலிட்டுள்ளார்.
 
இந்த சம்பவத்தால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கோபமடைந்துள்ளார். 
 
இந்த நிலையிலேயே அங்கு சிறிது நேரம் குழப்பமான சூழல் நிலவியுள்ளது.
 
இந்நிலையில், கட்சிகளின் ஆதரவாளர்கள் உயர் நீதிமன்ற வளாகப்பகுதியில் குழுமியுள்ளதால் அப் பகுதியில் பொலிஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
இதேவேளை, ஆதரவாளர்களை பொலிஸார் அகற்றமுற்பட்டபோது அங்கு முறுகல் நிலை தோன்றியமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை