மார்செய் - தீப்பிடித்த கட்டத்தில் இருந்து யன்னலால் குழந்தைகளை எறிந்த தாய்!!

PARIS TAMIL  PARIS TAMIL
மார்செய்  தீப்பிடித்த கட்டத்தில் இருந்து யன்னலால் குழந்தைகளை எறிந்த தாய்!!

இன்று காi 8h30 அளவில், மார்செய்யில் உள்ள Panier பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்று, தீப்பிடித்துள்ளது. இதனால் ஒரு தாயும் இரண்டு குழந்தைகளும், இரண்டாவது மாடியிலிருந்து, கீழே குதித்துள்ளனர்.
 
அந்த சமயத்தில் அந்தப் பகுதியால் வந்த 14 வயது மாணவனான மொஹமத் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு அருகிலிருந்த  வீட்டிலிருந்த மெத்தையைக் கொண்டு வந்து போட்டுள்ளார். மேலிருந்து குதித்தவர்கள் சிறுகாயங்களுடன் தப்பித்துள்ளனர். இந்த முயற்சியில் இரண்டு மாநகரசபைக் காவற்துறையினரும் உதவி புரிந்துள்ளனர்.
 
கீழ்வீட்டில் இருந்து பற்றிய இந்தத் தீ, மிக விரைவாக மேல்நோக்கிப் பரவ ஆரம்பித்துள்ளது. இது சமையலறை விபத்தினால் ஏற்பட்டது என முதற்கட்டத் தகவல்கள் தெரிவித்துள்ளன. விசாரைணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
இதுவரை எந்த உயிர்ச்சேதமும் இல்லை எனத் தீயணைப்புப் படைவீரர்கள் தெரிவித்துள்ளனர்.
 

மூலக்கதை