எலிசே மாளிகைக்கு புகை அடித்த டொனால்ட் ட்ரம்பின் வாகனம்!!
நேற்று சனிக்கிழமை பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில், ஜனாதிபதியின் எலிசே மாளிகையில் வாசலில் வைத்து டொனால்ட் ட்ரம்பின் வாகனம் புகையை வெளியிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் பரிசுக்கு வந்திறங்கிய டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலேனியா ட்ரம்ப் தம்பதியினர் எலிசே மாளிகைக்கு அவர்களின் கவச வாகனத்தில் வந்திருந்தனர். முன்னதாக இந்த சந்திப்பு இடம்பெறுமா என்பது குறித்த பலத்த சந்தேகங்கள் இருந்தன. காரணம் விமானத்தில் வந்திறங்கிய ட்ரம்ப், மக்ரோனின் பேச்சு குறித்து காரசாரமான கருத்தொன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். தவிர, ட்ரம்ப் தம்பதியினரை வரவேற்க மக்ரோன் விமான நிலையத்துக்கு வந்திருக்கவில்லை. இச்சம்பவங்களினால் இச்சந்திப்பு இடம்பெற்றாது என நம்பப்பட்டிருந்த நிலையில், ட்ரம்ப் தம்பதியினர் எலிசே மாளிகைக்கு வருகை தந்தனர்.
அவர்களை மக்ரோன் தம்பதியினர் வரவேற்கும் போது, ட்ரம்பின் கவச வாகனத்தில் இருந்து புகை கக்கியுள்ளது. இந்த புகைக்குள் ட்ரம்ப் தம்பதியினரும் மக்ரோன் தம்பதியினரும் சிக்கிக்கொண்டதுடன் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தும் கொண்டனர். இந்த சம்பவம் அங்கிருந்த ஊடகத்தினரால் புகைப்படம் எடுக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது.