மார்செ கட்டிட இடிபாடு! - வேறு சடலங்கள் இல்லை! - உறுதியளித்த தீயணைப்பு படையினர்!!
கடந்த திங்கட்கிழமை மார்செ நகரில் உள்ள கட்டிடம் ஒன்று இடித்து விழுந்ததில், இடிபாட்டுக்குள் எட்டுப்பேர் சிக்கியிருந்தனர். கடும் மழைக்குள் தொடர்ச்சியாக மீட்புப்பணி இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை நான்காம் நாள் முடிவில் எட்டுப்பேரின் சடலம் இடிபாடுக்குள் இருந்து மீட்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தொடர்ந்தும் இடிபாடுகளை அகற்றிய தீயணைப்பு படையினர், நேற்று சனிக்கிழமை ஊடங்களுக்கு தகவல் தெரிவிக்கும் போது, 'நிச்சயமாக வேறு சடலங்கள் இல்லை!' என உறுதியாக தெரிவித்துள்ளனர். இதுவரை ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் என மொத்தம் எட்டுப்பேரின் சடலங்கள் மீட்கபட்டிருந்தது.
இந்த மீட்புப்படியை ஒரு தலைமையின் கீழ் முன்னெடுத்த, துணை பொறுப்பதிகாரி Charles-Henri Garié தெரிவிக்கும் போது, 'சற்று முன்னர் தான் மீட்புப்பணி முடிவுக்கு வந்தது. நாங்கள் ஒவ்வொரு கற்களாக தேடிவிட்டோம். மேலதிகமாக எவ்வித சடலங்களும் இல்லை!' என தெரிவித்தார். இந்த மீட்புப்பணியில் 60 தீயணைப்புபடையினர் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.