புரோ கபடி லீக் போட்டி : பாட்னாவை வீழ்த்தியது பெங்களூரு

தமிழ் முரசு  தமிழ் முரசு
புரோ கபடி லீக் போட்டி : பாட்னாவை வீழ்த்தியது பெங்களூரு

புனே: புரோ கபடி லீக் போட்டியில், பெங்களூரு அணி 43-41 என்ற கணக்கில், பாட்னாவை வீழ்த்தியது. புரோ கபடி லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

புனேயில் நேற்று நடந்த ஆட்டத்தில், பெங்களூரு-பாட்னா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இரு அணி வீரர்களும் சிறப்பாக விளையாடியதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.



இந்நிலையில், பெங்களூரு அணி 43-41 என்ற புள்ளிக்கணக்கில் பாட்னாவை வீழ்த்தி திரில் வெற்றிபெற்றது.   மற்றொரு ஆட்டத்தில், டெல்லி மற்றும் புனே அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் சமபலத்துடன் விளையாடினர்.

இதனால் இரு அணிகளின் புள்ளிகளும் சமநிலையில் இருந்தது. சுதாரித்து கொண்ட புனே அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.

இறுதியில், டெல்லி அணியை 31-27 என்ற புள்ளிக்கணக்கில் புனே அணி வீழ்த்தியது. இது அந்த அணி பெற்றுள்ள 6வது வெற்றியாகும்.

பாட்னாவில் இன்று நடைபெறும் போட்டியில், பாட்னா மற்றும் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன.


.

மூலக்கதை