டீ-20 யிலிருந்து கப்டன் கூல் ஓய்வு?

PARIS TAMIL  PARIS TAMIL
டீ20 யிலிருந்து கப்டன் கூல் ஓய்வு?

இந்தியா விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் உடனான  20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்ருந்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி ஓய்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய கிரிக்கெட் அணியின் இப்போதைய ஜாம்பவான்களில் ஒருவராக இருக்கும் தோனி. தோனி 93 ரி- 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1487 ஓட்டங்களை குவித்துள்ளார். 
 
இந்நிலையில் எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 20 ஓவர் ரி- 20 போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெறுவதாக தேர்வுக்குழுவின் தலைவர் பிரசாத் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும், விக்கெட் காப்பாளர் இடத்துக்கு வீரர்களை நியமிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
இதேபோல், ஆவுஸ்திரேலியாவுக்கு எதிரான ரி- 20 போட்டியிலும் தோனி பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக ரிஷப் பந்த் விக்கெட் காப்பாளராக விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
ரி- 20 போட்டியிலிருந்து தோனி முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டாரா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ள தேர்வுக்குழுத் தலைவர் பிரசாத், முழுமையாக ஓய்வு பெறவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 
 
இதேபோல், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ரி-20 போட்டியில் இருந்து அணி தலைவர் விராட் கோலி ஓய்வு பெறுவதாகவும், அவருக்கு பதிலாக பொறுப்பு தலைவராக ரோஹித் ஷர்மா விளையாடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை