நாம் எல்லோரும் நாயாக இருக்கவேண்டுமென நினைக்கிறோம்: பரியேறும் பெருமாள் இயக்குனர்
சென்னை: மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகிறது. கபாலி, காலா என பெரிய படங்களை இயக்கிய ரஞ்சித் நல்ல திறமையாளர்களை அடையாளம் கண்டு வெளிக்கொண்டுவரும் முயற்சியிலும் இறங்கியுள்ளார். ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரித்திருக்கும் படம் பரியேறும் பெருமாள். இப்படத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். பத்திரிகையாளராக இருந்த மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.