கொழும்பு பேருந்துகளில் நடக்கும் கொடுமை! வெளியானது அதிர்ச்சி காணொளி

PARIS TAMIL  PARIS TAMIL
கொழும்பு பேருந்துகளில் நடக்கும் கொடுமை! வெளியானது அதிர்ச்சி காணொளி

கொழும்பில் இருந்து பயணிக்கும் பேருந்துகளில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களை வெளிப்படுத்தும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.
 
சிலர் குழுக்களாக இணைந்து பேருந்துகளில் பயணிப்போரின் பணம் மற்றும் உடமைகளை திருடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து புறநகர் பகுதி நோக்கி பயணித்த பேருந்தில் இளைஞன் ஒருவரின் பணப்பை திருடப்பட்டுள்ளது.
 
கோட்டைக்கு அருகில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது.
 
பேருந்துக்குள் நுழைந்த சந்தேக நபர் மிகவும், நுட்பமான முறையில் பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
 
இதுபோன்று பல்வேறு கொள்ளசை் சம்பவங்கள் கொழும்பில் இடம்பெறுவதாகவும், பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
 
 

மூலக்கதை