பா-து-கலே : தண்ணீருக்குள் காணாமல் போன அகதி! - தோல்வியில் முடிந்த தேடுதல் வேட்டை!!

PARIS TAMIL  PARIS TAMIL
பாதுகலே : தண்ணீருக்குள் காணாமல் போன அகதி!  தோல்வியில் முடிந்த தேடுதல் வேட்டை!!

பா-து-கலேயில் தண்ணீருக்குள் மூழ்கி காணாமல் போயுள்ள அகதி ஒருவரை தேடும் பணி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. 
 
கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.35 மணிக்கு இரண்டு நபர்கள், கிழக்கு துறைமுகத்தின் பாதுகாப்பு நிலையத்துக்கு வந்து, 'தங்கள் குழுவின் மூன்றாவது நபர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளார்' என தெரிவித்துள்ளனர். உடனடியாக தேடுதல் படி மேற்கொள்ளப்பட்டது. தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புக்குழு வரவழைக்கப்பட்டனர். உலங்குவானூர்தியும் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
தேடுதல் வேட்டை காலை 6 மணிக்கு நிறைவடைந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. பா-து-கலேயில் 400 இல் இருந்து 800 வரையான அகதிகள் தங்கியுள்ளதாகவும், பிரித்தானியாவுக்கு செல்வதற்காக பல ஆபத்தான முயற்சிகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை