பரிஸ் - இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்! - இருவர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
பரிஸ்  இளைஞன் மீது கத்திக்குத்து தாக்குதல்!  இருவர் கைது!!

பரிஸ் ஐந்தாம் வட்டாரத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். கொலையாளி உட்பட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். 
 
கொலை செய்ததற்குரிய காரணங்கள் இதுவரை அறியப்படவில்லை. 17 வயதுடைய இளைஞன் ஒருவனை, ஐந்தாம் வட்டாரத்தில் உள்ள Tournelle நகதில் வைத்து பிறிதொரு நபர் தாக்கியுள்ளான். கூரான கத்தி ஒன்றின் மூலம் மூன்று தடவைகள் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து காயமடைந்த இளைஞனை மீட்டு மருத்துவமையில் அனுமதித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை அதிகாலை 1.20 மணிக்கு அவர் உயிரிழந்தான். 
 
சம்பவம் இடம்பெற்ற சில நிமிடங்களில், கொலையாளியை 13 ஆம் வட்டாரத்தில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். கொலையாளி கைது செய்யப்படுவதை எதிர்த்த அவனது சகோதரனையும் காவல்துறையினர் கைது செய்தனர். இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை