Val-de-Marne : வாகனத்துக்குள் சிக்குண்டு எட்டு வயது சிறுவன் பலி!!

PARIS TAMIL  PARIS TAMIL
ValdeMarne : வாகனத்துக்குள் சிக்குண்டு எட்டு வயது சிறுவன் பலி!!

எட்டு வயது சிறுவன் ஒருவன் வாகனம் ஒன்றுக்குள் சிக்குண்டு காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். 
 
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு Chennevières-sur-Marne இல் உள்ள Aristide-Briand வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதசாரிகள் கடவையில், சிவப்பு விளக்கு எரியும் போது வீதியை கடந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது எனவும், வீதியில் வேகமாக வந்த வாகனம் ஒன்று சிறுவனை இடித்து தள்ளியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயங்களுக்கு உள்ளான சிறுவன், உடனடியாக 15 ஆம் வட்டாரத்தில் உள்ள நெக்கர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். 
 
ஆனால், சிறுவன் அதற்குள்ளாகவே உயிரிழந்துள்ளான். வாகன சாரதியை கைது செய்து பத்திரங்கள் மற்றும் மது சோதனை நடத்தப்பட்டது. அனைத்தும் சாரதிக்கு சாதகமாக இருந்தது. மனநல சிகிச்சைகள் அப்பகுதியில் உடனடியாக அமைக்கப்பட்டு பலர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

மூலக்கதை