பங்கு வெளியீட்டில் ‘இன்வென்ஷியா’
புதுடில்லி : ‘இன்வென்ஷியா ஹெல்த்கேர்’ நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யிடம் விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலமாக, 450 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதற்காக, 125 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பங்குகளும், நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும், 31 லட்சத்து, 64 ஆயிரம் பங்குகளும் வெளியிடப்பட உள்ளன.
இதில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான, ‘ஜேக்கப் பால்ஸ்’ நிறுவனர்களான, ஜானக் ஷா மற்றும் மாயா ஷா பங்குகளும் அடங்கும். இந்த பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டப்படும் நிதியை, பாக்கி கடன்களை தீர்க்கவும், பொதுவான நிர்வாகச் செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த பங்கு வெளியீட்டு பணிகளை, ‘ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டிஸ்’ மற்றும் ‘சென்ட்ரம் கேப்பிட்டல்’ ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்ள உள்ளன.