பயணியை தாக்கிய RATP ஊழியர்! - காவல்துறையினரால் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
பயணியை தாக்கிய RATP ஊழியர்!  காவல்துறையினரால் கைது!!

பரிசில் பயணியை தாக்கிய குற்றத்துக்காக RATP ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 
 
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. பரிஸ் 14 ஆம் வட்டாரத்தில் உள்ள Saint-Jacques நிலையத்தில் வழக்கமான சோதனை நடவடிக்கை மேற்கொண்ட ஊழியர் ஒருவரே பயணியை தாக்கியுள்ளார். 21 மணி அளவில் பயணச்சிட்டை சோதனையை மேற்கொண்ட ஊழியர், நபர் ஒருவரை தடுத்துள்ளார். அவரிடம் பயண அட்டை இருக்கவில்லை. இதனால் உடனடி தண்டப்பணம் செலுத்தவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை பயணி ஏற்க மறுத்துள்ளார். வாக்குவாதம் முற்ற, பயணியை RATP ஊழியர் தாக்கியுள்ளார். 
 
ஆறாம் வழி சுரங்கத்துக்குள் இடம்பெற்ற இந்த சம்பவம் அங்கிருக்கும் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மூலக்கதை