பெண்களுக்கான ஆசிய கால்பந்து தகுதிச் சுற்று இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெண்களுக்கான ஆசிய கால்பந்து தகுதிச் சுற்று இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்

புதுடெல்லி: 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஆசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடக்கிறது. இதற்கான முதல் கட்ட தகுதி சுற்று போட்டி மங்கோலியாவில் நடந்து வருகிறது.

இந்த ஆட்டத்தில்  ‘பி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியுடன் மோதியது. ஆட்டம் ஆரம்பித்த அடுத்த நொடியே இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அணியை பந்து அருகில் நெருங்கவிடவில்லை.   முதல் 30 நொடிகளுக்குள் ஒரு கோலை  அடித்தனர்.

இறுதியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி  வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் அவிகா சிங் 22-வது நிமிடத்திலும், சுனிதா முன்டா 82-வது நிமிடத்திலும், ஷில்கி தேவி 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

இந்திய அணிக்கு 2-வது கோல் பாகிஸ்தான் கோல்கீப்பர் ஆயிஷா மூலம் சுயகோலாக வந்தது இந்த ஆட்டத்திற்கு முன்பு இந்தியா முதல் ஆட்டத்தில் ஹாங்காங் அணியுடன் மோதியது. அந்த ஆட்டத்திலும்  இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் மங்கோலியாவை நாளை எதிர்கொள்ள இருக்கிறது.


.

மூலக்கதை