யாழில் பரிதாபமாக பலியான 23 வயது இளைஞன்...!!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் பரிதாபமாக பலியான 23 வயது இளைஞன்...!!

ழ்ப்பாணம், சாவகச்சேரியில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
 
நேற்று (19) இரவு ஏ9 வீதியின் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 
 
விபத்தில் மீசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த 23 வயதான நவநீதராசா வரதன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
 
டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
 
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர். 

மூலக்கதை