ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் பயணிகளுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணிக்கும் விமானம் ஒன்று தாமதமாகும் என பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் கிவன்ஜு நோக்கி நாளை அதிகாலை 1.30 மணியளவில் புறப்படவிருந்த ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ.எல். 880 விமானமானது 11 மணித்தியாலயங்கள் தாமதமாகவே புறப்படுமென, ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெனிகுயிட் எனப்படும் புயல் காரணமாகவே, விமானம் தாமதாகப் புறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த புயல் காரணமாக, கிவன்ஜு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.