Seine-et-Marne - சேவைத்துப்பாக்கியால் சுட்டு பெண் காவல்துறை அதிகாரி தற்கொலை!!

PARIS TAMIL  PARIS TAMIL
SeineetMarne  சேவைத்துப்பாக்கியால் சுட்டு பெண் காவல்துறை அதிகாரி தற்கொலை!!

தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி 22 வயதுடைய பெண் காவல்துறை அதிகாரி  ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை Lagny-sur-Marne நகர காவல்நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவல்துறை அதிகாரியே தனது சேவைத்துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக தற்கொலைக்கு முதன் நாள் குறித்த பெண் அதிகாரியும், மேலும் ஒரு அதிகாரியும் இணைந்து Drancy  இல் போதையில் மகிழுந்து ஓட்டிச் சென்ற  இரு நபர்களை கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து €4,60,000 யூரோக்களையும் பறிமுதல் செய்திருந்தனர். 
 
இந்நிலையில், குறித்த பெண் அதிகாரி தனது வீட்டில் வைத்து தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சடலம் மீட்கப்பட்டு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.

மூலக்கதை