நாளை முதல் மின்சார விநியோக தடை சீராகுமா?

PARIS TAMIL  PARIS TAMIL
நாளை முதல் மின்சார விநியோக தடை சீராகுமா?

 இலங்கைத் தீவு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சீரான முறையில் மின்சார விநியோகம் நடைபெறும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

 
கடந்த சில வாரங்களாக சுழற்சி முறையில் நாடு தழுவிய மின்சார விநியோக தடை செய்யப்பட்டு வந்தது. 
 
இந்நிலையில் அதனை முடிவுக்கு கொண்டு சீரான முறையில் மின்சாரத்தை வழங்க துறைசார் அமைச்சர் ரவி கருணாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். 
 
நாட்டினுள் நிலவும் கடும் வறட்சியான வானிலையால் ஏற்பட்ட மின்சார தடைக்கு தீர்வாக மூன்று கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
 
 
தற்போது அமுல்படுத்தப்படும் மின்சார தடையை நிறுத்துவதற்காக 500 முதல் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.
 
அத்துடன் எதிர்காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்

மூலக்கதை