பாலியல் பலாத்கார வழக்கு! - 13 வருடங்களுக்குப் பின் குற்றவாளிக்கு 8 வருட சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
பாலியல் பலாத்கார வழக்கு!  13 வருடங்களுக்குப் பின் குற்றவாளிக்கு 8 வருட சிறை!!

பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய நபர் ஒருவருக்கு 13 வருடங்களின் பின்னர், எட்டுவருட சிறைதண்டனை கிடைத்துள்ளது. 
 
இந்த பாலியல் பலாத்காரம் கடந்த 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இடம்பெற்றிருந்தது. Claye-Souilly ( Seine-et-Marne) நகரில் உள்ள வீடு ஒன்றில் வசித்த 86 வயது மூதாட்டி ஒருவரை 42 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டிருந்தார். அதிகளவான மது உட்கொண்டிருந்துவிட்டு போதையில் இந்த செயலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நீண்டகாலமாக இந்த வழக்கு விசாரணைகளில் மாத்திரமே இருந்தது. எவ்வித தடயங்களும் இல்லாமல் இருந்த இந்த வழக்கில், 2014 ஆம் ஆண்டு சில உடற்கூறு ஆதாரங்கள் (DNA)கிடைத்தன. 
 
அதிலும் சில குழப்பங்கள் நீடித்து, ஒருவழியாக தற்போது மிக சரியான குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். அதன் பின்னரே இந்த வழக்கு தீர்ப்புக்கு வந்தது. பின்னர் தற்போது, Seine-et-Marne குற்றவியல் நீதிமன்றத்தினால் குறித்த குற்றவாளிக்கு 8 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை