சோம்ப்ஸ்-எலிசேயில் வன்முறை! - 23 பேருக்கு சிறை!!

PARIS TAMIL  PARIS TAMIL
சோம்ப்ஸ்எலிசேயில் வன்முறை!  23 பேருக்கு சிறை!!

சோம்ப்ஸ்-எலிசேயில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 23 பேருக்கு பரிஸ் குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 
 
கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை இரு நாட்கள் பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தால் இந்த வழக்குகள் தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டது. மொத்தமாக 86 சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, விசாரிக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் முடிவில் 23 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இவர்கள் காவல்துறையினர் மீது வன்முறை, கடைகளை, வேலைத்தளங்களை உடைத்தல், எரியூட்டல், சட்டவிதிகளை மீறி செயற்பட்டல் போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
 
தவிர, இன்னும் 17 பேருக்கான பிடியாணை நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை, 18 ஆம் வார மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் 235 வயதுவந்தோர்கள் 235 பேரும், 18 வயதுக்குட்பட்டவர்கள் 21 பேரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை