தேசிய பணி பகிஷ்கரிப்பு! - பரிசில் 17,000 பேர் ஆர்ப்பாட்டம்!!
இன்று செவ்வாய்க்கிழமை பல்வேறு தொழிற்சங்கங்களினால் பணி பகிஷ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் பரிசில் முன்னெடுக்கப்பட்டது.
இன்றைய ஆர்ப்பாட்டத்தினை பிரதானமாக CGT மற்றும் Force Ouvrière ஆகிய இரண்டு தொழிற்சங்கங்களும் முன்னெடுத்திருந்தன. CGT தொழிற்சங்கம் இன்றைய நாளில் 50,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்கள் 17,500 பேர் இருந்தனர் என காவல்துறையினரால் கணக்கிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை வெளியாகவில்லை.
கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி பரிசில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 14,000 பேர் கலந்துகொண்டனர். ஆனால் CGT, இதனை 30,000 பேர் கலந்துகொண்டிருந்ததாக அறிவித்திருந்தது. அன்றைய நாளில் நாடு முழுவதும் 137,000 பேர் கலந்துகொண்டிருந்தனர். இதனை 300,000 பேர் கலந்துகொண்டிருந்ததாக அறிவித்திருந்தார்கள்.