தொடரூந்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்! - நபர் கைது!!
தொடரூந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தல் மேற்கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மார்செயில் இருந்து லியோன் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த TGV ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 32 வயதுடைய பெண் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய 46 வயதுடைய நபர் ஒருவர், குறித்த பெண்ணின் அந்தரங்க பகுதிகளில் கைகளை வைத்து தகாத முறையில் நடந்துகொண்டுள்ளார். குறித்த நபர் பின்னர் Saint-Fons, ( Lyon க்கு அருகே) வைத்து திங்கட்கிழமை நண்பகலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தற்போது காவல்துறையினரின் தடுப்புக்காவலில் விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்து, இன்று மார்ச் 19 ஆம் திகதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.