யாழிலிருந்த சென்ற வாகனம் விபத்து! பலியான நால்வர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்
புத்தளம் – நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேனும் எதிர்திசையில் பயணித்த டிப்பர் வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த மேலும் நால்வர் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் கர்ப்பிணி பெண்ணொருவர் அடங்கலாக மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியை சேர்ந்த 62 வயதான பெண்ணொருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த 51 வயதான பெண்ணொருவரும், வவுனியாவை சேர்ந்த 38 வயதான ஆணொருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த பெண்ணொருவர் இதுவரை அடையாளங் காணப்படவில்லை.
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த வேனொன்றே, விபத்துக்குள்ளாகியுள்ளது.