தண்டவாளத்தில் கிடந்த எரிவாயு குடுவை! - பாரிய விபத்தில் இருந்து தப்பிய TGV!!
TGV தொடரூந்து பயணிக்கும் தண்டவாளத்தில் எரிவாயு குடுவைகள் வைக்கப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனிவா நகருக்கும் பரிசுக்கும் இடையே பயணிக்கும் TGV ஒன்றே இந்த ஆபத்துக்குள் சிக்கியுள்ளது. தொடரூந்து புறப்பட்டு மூன்று மணிநேரங்களின் பின்னர் Ain மாவட்டத்தில் வைத்து தொடரூந்து தண்டவாளத்தில் கிடந்த எரிவாயு குடுவைகள் மீது மோதி தள்ளியுள்ளது. ஆனால் அதிஷ்ட்டவசமாக விபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பல மணிநேர போக்குவரத்து தடை ஏற்பட்டது.
இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை. சம்பவம் 15:00 மணி அளவில் இடம்பெற்றதாகவும், அதன் போது TGV மணிக்கு 80 கி.மீ எனும் குறைந்த வேகத்தில் பயணித்திருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.