2020 ஒலிம்பிக்ஸ் இர்பான் தகுதி

தினகரன்  தினகரன்
2020 ஒலிம்பிக்ஸ் இர்பான் தகுதி

புதுடெல்லி: டோக்கியோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆண்கள் 20 கி.மீ. நடை பந்தயத்தில் பங்கேற்க, இந்திய வீரர் கே.டி.இர்பான் தகுதி பெற்றார்.ஜப்பானின் நோமி நகரில் நடைபெற்று வரும் ஆசிய ரேஸ் வாக்கிங் சாம்பியன்ஷிப் தொடரில் களமிறங்கிய இர்பான் (கேரளா, 29 வயது), பந்தய தூரத்தை 1 மணி, 20 நிமிடம், 57 விநாடிகளில் கடந்து 4வது இடம் பிடித்தார். இதன்  மூலமாக ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்த அவர், டோக்கியோ ஒலிம்பிக்சுக்கு தகுதி பெற்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையை பெற்றார்.கடந்த ஜனவரி 1ம் தேதி தொடங்கிய நடை பந்தயத்துக்கான தகுதி சுற்று, அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வரை நிறைவடையும். மற்ற தடகள போட்டிகள் அனைத்துக்குமான தகுதி சுற்றுக்கு வரும் மே 1ம் தேதி தொடங்கி 2020,  ஜூன் 29ம் தேதி வரை அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை