உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் தமிழருக்கு வாய்ப்பு!
உலகக்கிண்ண தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் காப்பாளர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப்பந்திற்கு இடம் கிடைப்பது சந்தேகமே என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
உலகக்கிண்ண தொடருக்கான அணியின் தேர்வு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும், விஜய் ஷங்கர் அணியில் உள்வாங்கப்பட்டால், அணியில் தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப்பந்திற்கு இடம் கிடைப்பது சந்தேகமே என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், டோனிக்கு மாற்று விக்கெட் காப்பாளராக அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான கே எல் ராகுல், இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.