பொள்ளாச்சி சம்பவம் எதிரொலி! நடிகை ஓவியா கைதாக வாய்ப்பு
ஓவியா சமீபத்தில் வந்த 90ml படத்தில் அடல்ட் விஷயங்கள் நிறைந்த கதையில் நடித்திருந்தார். இப்படத்தில் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் என இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
படம் வெளியாகிவிட்ட நாட்களாகிவிட்ட போதிலும் ஓவியா மீது நேற்று கமிஷனர் அலுவலகத்தில் நேற்று திருவேற்காட்டை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
பொள்ளாச்சி சம்பவம் மனித இனத்திற்கே அவமானம். தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவங்களுக்கு சாதமாக படம் எடுக்கப்படுவது அதைவிட கேவலம். ஓவியா 90 ml படத்தில் அருவருக்கத்தக்க வகையில் நடித்திருந்தார்.
தமிழக கலாசாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும் பெண்களை தவறாக வழி நடத்தக்கூடிய வகையிலான அமைந்துள்ள இப்பட இயக்குனர் அனிதா உதீப், அதில் நடித்த ஓவியா ஆகியோரை கைது செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.