இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
இலங்கையில் நிலவுகின்ற அதிக உஷ்ணத்துடனான காலநிலையால், உடலில் உள்ள நீர்த்தன்மை அதிகளவில் வெளியேற்றப்படுகிறது.
இதனால் போதுமான அளவு நீரைப் பருகுமாறு சுகாதார அமைச்சு, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
உடலில் நீர்த்தன்மை விரைவாக வற்றுவதனால், சிறுநீரகத்தொகுதி பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரையான காலப்பகுதியில் வெயிலில் நிற்பதை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.