ஒரே நாளில் ஒரே பெயரில் இரு படங்களின் அறிவிப்பு

PARIS TAMIL  PARIS TAMIL
ஒரே நாளில் ஒரே பெயரில் இரு படங்களின் அறிவிப்பு

 ஹீரோ' என்ற பெயரில் ஒரே நாளில்இ ஒரே பெயரில் இரு படங்களின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

 
'இரும்புத்திரை' படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில்இ சிவகார்த்திகேயன்இ கல்யாணிஇ இவானா மற்றும் பலர் நடிக்க 'ஹீரோ' என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு இன்று(மார்ச் 13) முதல் ஆரம்பமாகி உள்ளது.
 
அதே சமயத்தில் தெலுங்குஇ தமிழ்இ மலையாளம்இ கன்னடம் ஆகிய மொழிகளில் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கும் 'ஹீரோ' என்று பெயர் வைத்துள்ளார்கள். இது பற்றிய அறிவிப்பை அவசர அவசரமாக நள்ளிரவில் வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 22ம் தேதி டில்லியில் ஆரம்பமாகும் என்றும் அறிவித்துள்ளார்கள்.
 
ஒரே பெயரில் இப்படி இரண்டு படங்களின் அறிவிப்பு வெளிவந்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. இப்படி ஒரு குழப்பம் ஏன் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.
 
'ஹீரோ' என்ற தலைப்பும் புதிய தலைப்பல்ல. 1984ம் ஆண்டில் அதே பெயரில் ரகுமான்இ சுகன்யா நடித்த தமிழ்ப் படம் ஒன்று வெளிவந்துள்ளது. இந்தப்படம் ஹிந்தியில் சஞ்சய் த்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'கல்நாயக்' படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை