போராடி தோற்ற இந்திய அணி!

PARIS TAMIL  PARIS TAMIL
போராடி தோற்ற இந்திய அணி!

இந்திய – அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் அவுஸ்ரேலியா அணி 32 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
 
ராஞ்சி மைதானத்தில் ஆரம்பமான 3 ஆவது ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
 
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய அவுஸ்ரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 05 விக்கட்டுக்களை இழந்து 313 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணி சார்பில் உஸ்மான் கவாஜா 104 ஓட்டங்களையும், அணித்தலைவர் பின்ஞ் 93 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 3 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
 
இந்த நிலையில் 314 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 281 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.
 
அணி சார்பாக விராட் கோஹ்லி 123 ஓட்டங்களையும் விஜய் சங்கர் 32 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் பட் கம்மின்ஸ், ஜெய் ரிச்சர்ட்சன் மற்றும் அடம் சம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
 
இதன்படி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கின்றது. 4 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை