அபி சரவணன் வெளியிட்ட படங்கள் சினிமாவிற்காக எடுக்கப்பட்டவை : அதிதி மேனன்

தினமலர்  தினமலர்
அபி சரவணன் வெளியிட்ட படங்கள் சினிமாவிற்காக எடுக்கப்பட்டவை : அதிதி மேனன்

பட்டதாரி படத்தில் அறிமுகமான நடிகை அதிதிமேனன், உடன் நடித்த அபி சரவணனை காதலித்தார். அதன் பிறகு அவர் களவாணி மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்தார். அமீர் இயக்கும் சங்குதேவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த நிலையில் அதிதி மேனன், அபி சரவணனை விட்டு பிரிந்துவிட்டார். அதோடு போலி திருமண சான்றிதழை காட்டி அபி சரவணன், தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக அதிதி மேனன் போலீசில் புகார் அளித்தார்.

இதன்பிறகு அபி சரவணன் தனக்கும், அதிதி மேனனுக்கும் திருமணம் நடந்தது உண்மை என்று கூறி, திருமணத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள், மற்றும் சில வீடியோக்களை வெளியிட்டார். அதோடு அதிதி மேனனுக்கு பல வாலிபர்களுடன் தொடர்பு உள்ளது.

இது குறித்து அதிதி மேனன் கூறியிருப்பதாவது:

நானும், அபிசரவணனும் பட்டதாரி படத்தில் ஜோடியாக நடித்தோம். அப்போது நாங்கள் காதலித்தது உண்மைதான். அபி சரவணனின் குடும்பத்தினர், எங்களின் காதலை ஏற்றுக்கொண்டனர். ஆனால், என்னுடைய குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லை. இதனால் அபி சரவணன் வற்புறுத்தியும் திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை. பட்டதாரி படத்துக்கு பிறகு நான் சில படங்களில் நடித்தேன். அப்போதுதான் அபி சரவணனுக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டது. அவரின் சில நடவடிக்கைகள் என்னை பெரிதும் பாதித்தது. மனஉளைச்சலுக்கு ஆளானேன்.

கடந்த நவம்பர் மாதம் எங்கள் காதல் முறிந்தது. அதன்பிறகு அபிசரவணன் என்னைப் பற்றி தவறான தகவல்களை பரப்பி வந்தார். என்னுடன் அவருக்கு திருமணம் நடந்ததாக போலி திருமண சான்றிதழ் வெளியிட்டார். எனக்கும், அவருக்கும் திருமணம் நடக்கவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், அந்த போலி சான்றிதழில் ஒரு சங்கத்தில் எனக்கும் அவருக்கும் திருமணம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது சுத்த பொய்.

நானும் அபி சரவணனும் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் பட்டதாரி படத்துக்காக எடுத்தவை. அவர் வெளியிட்ட வீடியோக்கள் நாங்கள் காதலித்தபோது ஜாலிக்காக எடுக்கப்பட்டவை. அதை காட்டி இந்த பதிவு சான்றிதழை அவர் பெற்றுள்ளார். இது தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

என்னுடைய டுவிட்டர் கணக்கை ஹேக் செய்து, அதிலிருந்தும் என்னுடைய புகைப்படங்களை திருட்டுத்தனமாக அபி சரவணன் எடுத்து வெளியிட்டுள்ளார். இது பற்றியும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன். என் மீது அபிசரவணன் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் அவர் நிரூபிக்கட்டும். அதற்குப் பிறகு அதுபற்றி பதில் சொல்கிறேன்.

இவ்வாறு அதிதி மேனன் கூறியுள்ளார்.

மூலக்கதை