5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்! பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

PARIS TAMIL  PARIS TAMIL
5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் செல்லலாம்! பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

எதிர்வரும் காலங்களில் 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணம் பயணிக்கும் ரயில் ஒன்றை சேவையில் ஈடுபடுத்துவதற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

 
பயணிகள் காலத்தை மீதப்படுத்தி ரயிலில் பயணிப்பதற்கே எதிர்பார்கின்றனர். 
 
இதனால் பொது மக்களின் அவசியத்திற்கமைய மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய வகையில் எதிர்வரும் காலங்களில் ரயில் வீதி ஒன்று அமைத்து சிறந்த போக்குவரத்து சேவை ஒன்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
 
அதற்கமைய இதுவரையில் அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
அதன் முடிவாக பொல்கஹவெல ரயில் நிலையத்தில் இருந்து குருணாகலை ரயில் நிலையத்திற்கும், குருணகாலை ரயில் நிலையத்தில் இருந்து மஹவ ரயில் நிலையம் வரையிலும் விரைவில் இரண்டு ரயில் வீதியாக மாற்றவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அதன் பின்னர் மஹவ ரயில் நிலையத்தில் இருந்து ஓமந்தை ரயில் நிலையம் வரையில் ரயில் வீதி ஒன்றை அமைந்து மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கும் வகையில் வீதி அமைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மூலக்கதை