செந்தனி - பாதாள அறைக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்! - கணவர் கைது!!

PARIS TAMIL  PARIS TAMIL
செந்தனி  பாதாள அறைக்குள் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்!  கணவர் கைது!!

செந்தனியில் உள்ள வீடு ஒன்றின் பாதாள அறைக்குள் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அப்பெண்ணின் கணவர் கைது செய்யபப்ட்டுள்ளார். 
 
நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சடலம் அப்பிராந்திய காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண் 49 வயது உடையவர் எனவும், அவரின் கணவர் 47 வயதுடையவர் எனவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் சென்றிருந்தபோது, குறித்த நபர் சடலத்துக்கு அருகிலேயே இருந்துள்ளார். எங்கேயும் தப்பிச் செல்லவில்லை. 
 
பிரான்சில் கடந்த 2017 ஆம் ஆண்டில் 130 பெண்கள் தங்களது கணவரால் கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 220,000 பெண்கள் தங்கள் கணவரால் அல்லது துணையினால் வன்முறைக்குள் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை