சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்வு ; ரூபாயின் மதிப்பு சரிவு

தினமலர்  தினமலர்
சென்செக்ஸ் 230 புள்ளிகள் உயர்வு ; ரூபாயின் மதிப்பு சரிவு

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் உயர்வுடன் ஆரம்பமாகி உள்ளன.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 228.12 புள்ளிகள் உயர்ந்து 36,614.73-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 53.10 புள்ளிகள் உயர்ந்து 10,960.05-ஆகவும் வர்த்தகமாகின.

ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தாலும், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு சரிவு

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சரிவுடன் காணப்படுகிறது. வர்த்தகநேர துவக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்து ரூ.71.45-ஆக இருந்தது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்ததன் எதிரொலியாக ரூபாயின் மதிப்பு சரிந்ததாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்தனர்.

மூலக்கதை