Courchevel தீவிபத்தில் இருவர் பலி! - பலர் வெளியேற்றம்!!
இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை Courchevel (Savoie) பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து இருவர் பலியாகியுள்ளனர்.
அதிகாலை 4:30 மணி அளவில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த கட்டிடத்தில் வெளிநாட்டினர் உட்பட 60 பேர்வரை வசித்துள்ளனர். விபத்துக்குரிய காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் நால்வர் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கபப்ட்டுள்ளனர். இவர்கள் தவிர மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டனர். 70 தீயணைப்பு படையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். காலை 8 மணிக்கு தீ அணைக்கப்பட்டதுடன் வெளியேற்றப்பட்ட மக்களுக்கு தற்காலிக தங்குமிடமும் ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.