Brunoy : தாதியர் வீட்டில் சடலமாக கிடந்த குழந்தை! - காவல்துறையினர் விசாரணை!!

PARIS TAMIL  PARIS TAMIL
Brunoy : தாதியர் வீட்டில் சடலமாக கிடந்த குழந்தை!  காவல்துறையினர் விசாரணை!!

நேற்று வெள்ளிக்கிழமை Brunoy பகுதியில் வசிக்கும் தாதியர் ஒருவரின் வீட்டில் இருந்து இரண்டு வயது சிறுவனின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. 
 
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை மீட்டதுடன், தாதியாரையும் விளக்கமறியலுக்கு அழைத்துள்ளனர். இந்த சம்பவம் ஒரு விபத்தாக இருக்கலாம் என முதல்கட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அடுத்தவாரத்துக்குள் தள்ளி வைக்கபப்ட்டிருக்கும் பிரேத பரிசோதனைகள் முடிவின் பின்னரே உறுதியாக தெரிவிக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 
குறித்த சிறுவன் உடல்நலக்குறைவாக இருந்தான் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அப்பிராந்திய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

மூலக்கதை