கலவரக்காரர்களை அடக்க பரிசுக்குள் 5,000 காவல்துறையினர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
கலவரக்காரர்களை அடக்க பரிசுக்குள் 5,000 காவல்துறையினர்!!

இன்று சனிக்கிழமை பரிசில் பத்தாவது வார மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற உள்ளதை அடுத்து, பரிசில் 5,000 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 
 
மஞ்சள் மேலங்கி போராட்டத்தில் இவ்வாரம் மிக குறைந்த அளவான போராளிகளே கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இருப்பினும் வன்முறையை தடுக்கும் விதமாக Champs-Elysées, la place de la Concorde, le palais de l'Elysée மற்றும் le ministère de l'Intérieur ஆகிய பகுதிகள் முற்றுமுழுதாக தடை விதிக்கப்பட உள்ளன. மஞ்சள் மேலாடை குழுவுக்கு இப்பிராந்தியங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
தவிர, எட்டு இராணுவ வாகனங்களும், 5,000 காவல்துறையினரும் பரிசுக்குள் குவிக்கப்பட்டுள்ளனர். தவிர இன்றைய ஆர்ப்பாட்டத்தில் மிக குறைவான நபர்களே ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை