துஸ்பிரயோக குற்றச்சாட்டு தொடர்பில் ரொனால்டோவிற்கு பிறப்பித்துள்ள உத்தரவு!
பிரபல காற்பந்து வீரர் க்றிஸ்டியானோ ரொனால்டோவின் மரபணு மாதிரிகளை வழங்குமாறு லாஸ்வேகாஸ் காவற்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
2009ம் ஆண்டு அவரால் கத்ரின் மயோர்கா என்றப் பெண் லாஸ்வேகாசில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அவரது மரபணு மாதிரிகளை காவற்துறையினர் கேட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் ரொனால்டோ இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.