பிரிமியர் பேட்மின்டன் டெல்லி அணியை வென்றது பெங்களூரு
அகமதாபாத்: பிரிமியர் பேட்மின்டன் லீக் போட்டியில், பெங்களூரு அணி டெல்லியை வீழ்த்தியது. நேற்று நடந்த போட்டிகளில், இந்திய வீரர்களான காந்த், சாய் பிரணீத் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பிரிமியர் பேட்மின்டன் லீக் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியாவை சேர்ந்த முன்னணி வீரர், வீராங்கனைகள் மற்றும் வெளிநாட் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
அகமதாபாத்தில் நடந்த ஆட்டத்தில் பெங்களூரு, டெல்லி அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், பெங்களூரு வீரர் சாய் பிரணீத், டெல்லியின் பிரணாய் ஆகியோர் மோதினர்.
இதில், சிறப்பாக விளையாடிய பிரணீத் 15-12, 14-15, 15-13 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.
கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில், பெங்களூருவின் லாரன் ஸ்மித், மார்கஸ் ஜோடியை, டெல்லியின் மணிபொங், எவ்ஜெனியா ஜோடி வென்றது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெங்களூருவின் காந்த், டெல்லி வீரர் சுகியர்டோ ஆகியோர் பலப்பரிட்சை நடத்தினர். இதில், 15-6, 12-15, 15-10 என்ற கணக்கில் காந்த் அபார வெற்றி பெற்றார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் பெங்களூரு அணியை சேர்ந்த டிராங் வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் டெல்லியை சேர்ந்த சாய் பியாவோ, மணிபொங் ஜோடி வெற்றி பெற்றது.
5 போட்டிகளின் முடிவில் 2-1 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
.