தாக்குப்பிடித்து விளையாட விரும்பினேன்: சொல்கிறார் மயாங்க் அகர்வால்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தாக்குப்பிடித்து விளையாட விரும்பினேன்: சொல்கிறார் மயாங்க் அகர்வால்

மெல்போர்ன்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. அறிமுக வீரர் மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.

அறிமுக போட்டியில் களமிறங்கினாலும் எவ்வித பதட்டமும் இன்றி நிதானமாக விளையாடினார் மயாங்க் அகர்வால். 76 ரன்கள் எடுத்த நிலையில் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்தார்.

விஹாரி- மயாங்க் அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 40 ரன்கள் சேர்த்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மயாங்க் அகர்வாலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.
இதுகுறித்து, மயாங்க் அகர்வால் கூறியதாவது: அறிமுக போட்டியில் சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சியளிக்கிறது.



என்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை அரைசதத்துடன் துவங்கியுள்ளேன். டெஸ்ட் போட்டியில் விளையாடுவது என்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.

அறிமுக போட்டியில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி ஆட்டத்தின் மீது கவனம் செலுத்துவது எளிதான காரியம் அல்ல. என்னுடைய திட்டத்தில் உறுதியாக இருந்தேன்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை எனக்குள்ளே கூறிக் கொண்டேன். முதல் போட்டியிலேயே 76 ரன்கள் அடித்திருப்பது மகிழ்ச்சியை தந்தாலும் இன்னும் அதிக ரன்கள் எடுத்திருக்க வேண்டும்.

அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்றும், நாள் முழுவதும் தாக்குப்பிடித்து விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை