விழா மேடையிலேயே வாய்ப்பு கேட்கும் பால சரவணன்

தினமலர்  தினமலர்
விழா மேடையிலேயே வாய்ப்பு கேட்கும் பால சரவணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து வந்தவர் பாலசரவணன். அதையடுத்து குட்டிப்புலி படத்தில் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங் என பல படங்களில் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருந்த பாலசரவணனை, சமீபகாலமாக அதிகமான படங்களில் பார்க்க முடியவில்லை.

இதற்கு காரணம், விஜய்க்கே என்னிடம் நல்ல கதை உள்ளது என்று ஒரு பேட்டியில் தெரிவித்த பால சரவணன், அதையடுத்து இயக்குநராக தயாராகி விட்டதாக செய்திகள் வெளியாகின. விளைவு, அவருக்கான படவாய்ப்புகள் குறைந்தன.

தற்போது ஓரிரு படங்களில் மட்டுமே நடித்து வரும் பாலசரவணன், சினிமா விழாக்களில் பேசும்போது, அங்கு வந்திருக்கும் முன்னணி டைரக்டர்கள் மற்றும் நடிகர்களிடம் தனக்கு படங்களில் நடிக்க வாய்ப்புத்தருமாறு நேரடியாகவே கேட்டு வருகிறார்.

மூலக்கதை