தொடரை தீர்மானிக்கும் போட்டி இன்று!

PARIS TAMIL  PARIS TAMIL
தொடரை தீர்மானிக்கும் போட்டி இன்று!

இந்தியா மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான தொடரை தீர்மானிக்கும் ரி-ருவென்ரி போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது.
 
கேப்டவுனில் இலங்கை நேரப்படி இரவு 9.30 மணிக்கு இந்த போட்டி நடைபெறவுள்ளது.
 
இவ்விரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்று முடிந்த முதலிரு ரி-ருவென்ரி போட்டிகளில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் தென் ஆபிரிக்காவும் வெற்றிபெற்றது.
 
இன்றைய போட்டிக்கான இந்திய அணியை பொறுத்தவரையில் துடுப்பாட்டத்தில் ஷிகர் தவான், கோஹ்லி, மனிஸ் பாண்டே மற்றும் தோனி ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். அதேபோன்று ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அதேபான்று பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், பூட்ரா, பாண்ட்யா மற்றும் சாஹல் ஆகியோர் வலுவாக உள்ளனர் எனினும் சாஹல் மீதே இரசிகர்களின் நம்பிக்கை அதிகமாக உள்ளது.
 
தென் ஆபிரிக்க அணியை பொறுத்தவரையில், ஹென்டிரிக்ஸ், சுமட்ஸ், டுமினி, கிளாசென், டேவிட் மில்லர் ஆகிய வீரர்கள் உள்ளனர். குறிப்பாக விக்கெட் காப்பாளர் கிளாசென் சிறப்பாக விளையாடிவருகின்றார்.
 
இரண்டாவது போட்டியில் 189 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றதால் இன்றைய போட்டியிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையில் தென் ஆபிரிக்க அணி உள்ளது.
 
அதேபோன்று ஒருநாள் தொடரை வென்றுள்ள இந்திய அணி, ரி-ருவென்ரி தொடரையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்கும்.
 

மூலக்கதை