உலகின் மிக உயரமான கட்டடத்தில் பிரபாஸ்

தினமலர்  தினமலர்
உலகின் மிக உயரமான கட்டடத்தில் பிரபாஸ்

பாகுபலி நாயகன் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் சாஹோ. திரில்லர் கதையில் உருவாகிறது. இதுவரை ஐதராபாத்தில் நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் துபாயில் நடக்கிறது. ஒரேகட்டமாக நடக்கும் படப்பிடிப்பு அபுதாபி, ருமேனியா போன்ற பகுதிகளிலும் நடைபெறுகிறது.

குறிப்பாக, துபாயில் உள்ள புர்ஜ் கலிபா என்ற உலகின் மிக உயரமான கட்டடத்தில் பிரபாஸ் - நீல் நிதின் முகேஷ் சம்பந்தப்பட்ட சண்டை காட்சி படமாக்கப்படுகிறது. இந்த சண்டை காட்சியை, ரஜினியின் 2.O படத்திற்கு சண்டை அமைத்துள்ள ஹாலிவுட் பைட் மாஸ்டர் கென்னி பேட்ஸ் படமாக்குகிறார்.

மூலக்கதை