யாழில் இருந்து சென்ற பேருந்தில் வெடிப்பு: தீவிரவாத செயற்பாடா?

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் இருந்து சென்ற பேருந்தில் வெடிப்பு: தீவிரவாத செயற்பாடா?

யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவையில் பயணிகள் பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தீவிரவாத செயற்படு அல்ல எனத் தாம் நம்புவதாக தெரிக்கப்படுகின்றது.

 
இராணுவ ஊடகப் பேச்சாளரான பிரிகேடியர் சுமித் அத்தபத்து இதனை தெரிவித்துள்ளார்.
 
தியத்தலாவை - கஹாகொல்ல பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்றில் இன்று அதிகாலை 5.40 மணியளிவில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
 
அவர்களில் 7 இராணுவத்தினர் மற்றும் 5 விமானப் படையினர் உள்ளடங்களாக 12 படையினர் உட்பட 7 பொதுமக்கள் உட்பட 19 பேரே காயமடைந்துள்ளனர்.
 
தீப்பரவல் மற்றும் வெடிப்பு என்பன காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சம்பவம் தொடர்பில் பொலிஸாரும், இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 

 

மூலக்கதை