யாழில் இருந்து சென்ற தனியார் பேருந்தில் தீப்பிடிப்பு! 15 பேர் காயம்

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் இருந்து சென்ற தனியார் பேருந்தில் தீப்பிடிப்பு! 15 பேர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவ வரை பயணித்து மீண்டும் பண்டாரவெல நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று திடீர் என தீப்பற்றிக் கொண்டுள்ளது.
 
இதனால் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இன்று (21) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
 
காயமடைந்தவர்கள் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
பேருந்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தினால் இந்த தீ ஏற்பட்டுள்ளதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவித்துள்ளன. 
 
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

மூலக்கதை