யாழில் தனிமையில் வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

PARIS TAMIL  PARIS TAMIL
யாழில் தனிமையில் வாழ்ந்த பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

யாழ். மானிப்பாய், கட்டுடைப் பகுதியில் தனிமையில் வாழ்ந்த பெண்ணொருவருடைய சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
 
இன்று நண்பகல் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
அதே இடத்தைச் சேர்ந்த த.இரத்தினதேவி எனும் 74 வயதுடையே மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
சடலம் மீட்கப்பட்ட வீட்டின் ஓடுகள் கழற்றப்பட்ட நிலையில் இருந்து. இதனால் கொள்ளையர்களே மூதாட்டியை கொலை செய்துவிட்டு கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
 
அத்துடன், மீட்கப்படும் போது சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
குறித்த மூதாட்டியை மூன்று நாட்களாக காணாத நிலையில் அயலவர்கள் இன்று முற்பகல் அவரை தேடிச் சென்றுள்ளனர்.
 
அதன்போதே மூதாட்டி சடலமாகக் காணப்பட்டுள்ளதை அவதானித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.
 
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூலக்கதை