டி-20 இல் இணையும் இந்திய அணியின் முக்கிய வீரர்!

PARIS TAMIL  PARIS TAMIL
டி20 இல் இணையும் இந்திய அணியின் முக்கிய வீரர்!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரின் முதலாவது போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.
 
அந்த வகையில் இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, லோகேஷ் ராகுல், ஜெயதேவ் உனத்கட் ஆகிய வீரர்கள் புதிதாக இணைந்துள்ளனர்.
 
இந்த வீரர்களில் டி-20 போட்டியின் சிறந்த சகலதுறை ஆட்டக்காரரான சுரேஸ் ரெய்னா ஒரு வருடத்திற்குப் பின்னர் அணியில் இடம்பெறுகின்றார்.
 
இவர் கடைசியாக இங்கிலாந்து அணிக்கெதிரான ரி-20 போட்டியில் விளையாடியிருந்தார்.
 
உடற்கூற்று சோதனையில் தோல்வியடைந்ததால் 2017/2018  காலப்பகுதியில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார். எனினும் கடந்த டிசம்பரில் இடம்பெற்ற உடற்கூற்று சோதனையில் தெரிவானதையடுத்து தற்போது அணியில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை