கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளிலும் ஆட்சியமைக்க கூட்டமைப்பு முடிவு!…
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது. பூநகரி பிரதேச சபையில் அறுதிப் பெரும்பான்மை உள்ளதுடன், ஏனைய இரண்டு சபைகளிலும் அதிகூடிய ஆசனங்களைப்பெற்ற கட்சியாக கூட்டமைப்பு உள்ளது. கரைச்சி பிரதேச சபையின் தவிசாளராக அருணாசலம் வேளமாலிகிதனும், உப தவிசாளராக சின்னையா தவபாலனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். பூநகரி பிரதேச சபையின் தவிசாளராக அருணாச்சலம் ஐயம்பிள்ளையும், உப தவிசாளராக சிவகுமாரன் சிறீரஞ்சனும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். The post கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்று சபைகளிலும் ஆட்சியமைக்க கூட்டமைப்பு முடிவு!… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.